This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
Translation - Tamil (1)
இம்முறை தேர்தல் ஆணைக்குழுவின் நோக்கமாக இருப்பது, வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு வருகை தருகின்ற வாக்காளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எனவும், அதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து தேர்தல் ஆணைக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிடுகிறார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐரோப்பிய தூதுவராலயங்களினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்களின் படங்கள் மற்றும் அவர்களின் விருப்பு வாக்குகளுக்கான இலக்கங்களை காட்சிப்படுத்துவதைத் தடை செய்வதற்கு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட குழுவினரால் ஆவன செய்யப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் எதிர்வரும் தேர்தலுக்காக பொதுமக்களின் தேர்தல் தொடர்பிலான சூடுபிடித்தல் தன்மையை இல்லாமற் செய்து வாக்குகள் அளிக்கும் சதவீதத்தை குறைப்பதே அவர்களது நோக்கமாக இருப்பதாகவும் விமல் வீரவங்ச தெளிவுறுத்தவதோடு, எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் ஆணைக்குழு நீக்கப்பட்டு, ஜனாதிபதிக்கே அனைத்து அதிகாரங்களையும் வழங்கி நாட்டுக்கு ஏற்றாற்போன்ற புதிய யாப்பை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் வாக்களிப்போர் எண்ணிக்கையை குறைப்பதனூடாக பெரும்பான்மையினரின் விருப்பிற்கு ஏற்ப உருவாகாத அரசாங்கம் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சுமத்துவதற்கு ஏற்றாற்போன்ற தேவையான ஒழுங்குகளைச் செய்தல் தேர்தல் ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றிக் கொள்வதற்கு தலைவர் உள்ளிட்ட பகுதியினருக்கு இடமளிக்க மாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(2)
மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வணிகக் கப்பல்களின் மாலுமிகளை பரிமாற்றம் செய்யும் மத்திய நிலையமாக முன்னேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில், ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கடந்த மாதம் மாத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு 13 விமானங்கள் வந்திறங்கின. ரோமில் இருந்து 155 பேரை ஏற்றிவந்த விமானம் நேற்று மத்தளையிலிருந்து நாட்டுக்கு வருகை தந்ததுடன், இன்று ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து 90 பேர் விமான நிலையத்திலிருந்து தரையிறங்கினர். இலங்கை வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் மாத்தளை விமான நிலையம் வழியாக வந்துள்ளனர். மாத்தளை சர்வதேச விமான நிலையம் சர்வதேச விமானச் சேவையைத் தொடங்க தயாராக உள்ளது. பல சர்வதேச விமான நிறுவனங்கள் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. அவர்களுடன் மேலதிக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதல்களின்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்கள் அனைவரும் பி.சி.ஆர் மூலம் பரிசோதிக்கப்படுகிறார்கள். ஆய்வு அறிக்கைகள் வரும் வரை அவர்களை ஆறு மணி நேரம் விமான நிலையத்திற்கு அருகில் தடுத்து வைக்க வேண்டியிருந்தது. இந்த சூழ்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3-4 விமானங்களை மட்டுமே இயக்க முடியும். மாத்தளை விமான நிலையத்தைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தீவுக்கு திருப்பி எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார். மத்தளைக்குச் செல்ல சர்வதேச விமான நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் அவர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்தளை சர்வதேச விமான நிலையம் 18 மார்ச் 2013 அன்று திறக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த செலவு 209 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஏற்கனவே இருந்த நல்லாட்சி அரசாங்கம் விமான நிலையத்தின் விமான நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்தி நெல் சேமிக்கத் தொடங்கியது. திரு. கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், மத்தளை விமான நிலையத்தை செயலில் உள்ள விமான நிலையமாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தார் என்று அமைச்சர் பிரசன் ரணதுங்க சுட்டிக்காட்டினார். புதிய அரசாங்கத்தின் கீழ் மத்தளை விமான நிலையத்தில் சர்வதேச விமான நடவடிக்கைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
More
Less
Translation education
Other - Department of Official Languages, Sri Lanka
Experience
Years of experience: 18. Registered at ProZ.com: Jan 2011.
Keywords: Arabic, Chinese, Divehi, English, German, Gujarathi, Hindi, Indonesian, Italian, Malayalam. See more.Arabic, Chinese, Divehi, English, German, Gujarathi, Hindi, Indonesian, Italian, Malayalam, Marathi, Sinhala, Tamil, Urdu, Czech, Korean, Japanese, Polish, Norwegian, Swedish, French, Sinhalese, translation, translator, linguistic works, tamil translation, tamil translator, sinhala translation, sinhala translator, tamil to english, english to tamil, english to sinhala, sinhala to tamil, sinhalese to tamil, english to sinhalese, tamil to sinhala, tamil to sinhalese, sri lankan tamil, sri lankan translator, translation professional, professional translator, professional tamil translator, professional sinhala translator, fast service, language, sociology, international studies, conflict resolution, domestic violence, legal documents, tourism, academic books, leaflets, conference interpreter, sri lanka, ceylon, native, mohammed, fahim, razick, medical, pharmaceutical, social, language, expert, interpreter, quality, Překlad, Vertaling, traduction, Übersetzung, μετάφραση, fordítás, terjemahan, Traduzione, 翻訳, 번역, oversettelse, tłumaczenie, Tradução, перевод, traducción, Översättning, แปล, الترجمة, תרגום. See less.
This profile has received 4 visits in the last month, from a total of 3 visitors